இளவரசர் ஹரி, மேகனுக்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் எதிர்ப்பலை: ஆயிரக்கணக்கானோர் கையெழுத்து
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அவுஸ்திரேலியாவில் தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கினர்.
மேகனை 'வெறுப்பதாக'
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் இருவரும் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா சென்றடைந்தனர்.

அரச தம்பதியர் மெல்போர்ன், கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு செல்ல உள்ளனர்.
இருவரும் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, ஆரம்பத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டனர். பயணி ஒருவர் மேகனை 'வெறுப்பதாக' கூறினார்.
அதேபோல் சிட்னியில் அவுஸ்திரேலியர் ஒருவர், "அவர்கள் (ஹரி, மேகன்) சுய விளம்பரத்திலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அப்படி சொன்னால், அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்காத அரச குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்" எனக் கூறியதாக பிபிசி தெரிவிக்கிறது.

46,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்து
மேலும், அரச தம்பதி தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களின் பயணத்திற்காக வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படக்கூடாது எனக் கோரி 46,000க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றில் கையெழுத்திட்டதாக தெரிய வந்துள்ளது.
என்றாலும் ஹரி, மேகன் தம்பதிக்கு மெல்போர்னில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் அன்பான வரவேற்பு கிடைத்தது. இந்த வருகை அனைவருக்கும் 'புன்னகையை' வரவழைத்ததாக நோயாளிகளும், பெற்றோர்களும் கூறினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |