மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பிய இளவரசர் ஹரி - மேகன் மார்க்கல்!
சர்ச்சைக்குரிய அமெரிக்க நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்துடன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலின் ஆர்க்கெவெல் அறக்கட்டளை பல ஆண்டு உலகளாவிய கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
சமீபத்தில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலில் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எதிராக இனவாதம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், இருவரும் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய காரியத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான புரோக்டர் & கேம்பிள் (P&G) உடன் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் Archewell மற்றும் P&G நிறுவனம் உடனான கூட்டு ஒப்பந்தத்தின் மூலம், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தை கொண்டுவருவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 'அதிக இரக்கமுள்ள சமூகங்களை உருவாக்க' அவர்கள் பணியாற்றப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கூட்டணி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால்.., மேகன் மார்க்கல் தனது 11 வயதில், ஒரு பாத்திரம் கழுவும் சோப் விளம்பரம் தொடர்பாக, இதே P&G நிறுவனத்துக்கு எதிராக பாலியல் எதிர்ப்பை வெளிப்படுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், புரோக்டர் & கேம்பிள் நிருவனத்தின் சமீபத்திய வரலாறுகள் சர்ச்சிக்குரியனவாக இருந்துள்ளன. இதன் காரணமாக இந்த புதிய கூட்டணி அமெரிக்க மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
P&G நிறுவனத்துக்கு 2011-ஆம் ஆண்டில் யூனிலீவர் மற்றும் ஹென்கெல் ஆகியோருடன் விலை நிர்ணயம் செய்ததற்காக ஐரோப்பிய ஆணையத்தால் 211.2 மில்லியன் டாலர் (9 149 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் 2016-ஆம் ஆண்டில் Amnesty International into child and forced labour அமைப்பு P&G நிறுவனம் மீது வைக்கப்பட்ட குற்றச்சட்டு பரவலாக விமர்சிக்கப்பட்டது.
Our multi-year global collaboration with Archewell Foundation is uniting behind a true shared mission: centered on gender equality, creating more compassionate and inclusive online spaces, and resilience & impact through Para sports. https://t.co/qJ3IExbde4 #LeadWithLove pic.twitter.com/zPdc9g6HCc
— Procter & Gamble (@ProcterGamble) May 11, 2021
P&Gக்கு மூலப்பொருட்களை வழங்கிய பாமாயில் நிறுவனமான வில்மர் இன்டர்நேஷனல், 8 முதல் 14 வயது வரையிலான குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியதாக குற்றச்சட்டுகள் உள்ளன.
விலங்கு உரிமைகள் குழுவான PETA-வும் விலங்குகளை பரிசோதிக்கும் நடைமுறைகள் தொடர்பாக P&G மீது புகார் அளித்துள்ளது.
மேலும், இது போன்ற பல சர்ச்சைகள் நிறைந்த நிருவனத்துடன், சமூகத்துக்கு நன்மை செய்யும் நோக்கில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் இணைந்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.