'மகாராணியார் செய்யத் தயங்குவதை இவர் செய்வார்' ஹரி-மேகன் குறித்து இளவரசர் சார்லஸின் திட்டத்தை போட்டுடைத்த முக்கிய நபர்!
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் ராயல் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக பிரித்தானிய அரச எழுத்தாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் செய்யத் தயங்கும் ஒன்றை இளவரசர் சார்லஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக பிரித்தானிய அரச எழுத்தாளர் ஏஞ்சலா லேவின் (Angela Levin) கூறியுள்ளார்.
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தனது முடியாட்சியில் செலவுகளை குறைப்பதற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரையும் ராயல் குடுப்பத்திலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக லேவின் கூறியுள்ளார்.
மகாராணி தனது தனிப்பட்ட உணர்வுபூர்வமான காரணங்களுக்காக மிக நீண்ட காலமாக இதைச் செய்ய தயக்கம் கட்டியதாகவும், அவர் ராயல் குடும்பத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்றும் தான் புரிந்துகொண்டதாக ஏஞ்சலா லேவின் தெரிவித்தார்.
"ஆனால், இளவரசர் சார்லஸ் மாற்றத்தை விரும்புகிறார், இதை கட்டாயம் செய்வார்" என லேவின் தெரிவித்துள்ளார்.
"செலவுகளை மிச்சப்படுத்தவும், வரி செலுத்துவோரிடமிருந்து கிடைத்த பணத்தை மக்களுக்கே உரியதாக்கவும் அரச குடும்ப உறுப்பினர்களைக் குறைக்க இளவரசர் சார்லஸ் மிக நீண்ட காலமாக விரும்பினார்" என கூறிய லேவின் "ஹரி மற்றும் மேகன் ஆகியோர் ராயல் குடும்ப உறுப்பினர்களாக இருந்து விலகிச்செல்லும்போது அது நடக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன்" என்றார்.
மேலும், பொது வாழ்க்கையில் சார்லஸ் இன்னும் அதிகமாக முன்னேறத் தொடங்குவார் என்றும், "இனி இளவரசர் சார்லஸுடன் சண்டையிட" ராணி விரும்பமாட்டார் என்றும் லெவின் விளக்கினார்.
"உண்மையில், அரச குடும்பத்தின் சார்பாக மிகப் பெரிய முடிவுகளை சார்லஸ் எடுப்பதற்கு ராணியார் நன்றியுள்ளவராக இருப்பார் என்று தான் நினைக்கறேன்" என்று லேவின் கூறினார்.