பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில்தான் அந்த விழா நடக்கும்... அதுவரை காத்திருப்போம்: இளவரசர் ஹரி திட்டவட்டம்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வீறாப்பாக அரண்மனையை விட்டு வெளியேறியதுடன், ராஜ குடும்பத்தினர் மீது மண்ணையும் வாறி இறைத்தார்கள்.
ஆனால், அரண்மனைக்கு வெளியில் உள்ள வாழ்வு அவர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கும்போலும், இப்போது மீண்டும் ராஜ குடும்பத்துடன் ஒட்டிக்கொள்ள என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள்.
அந்தவகையில், தங்கள் இரண்டாவது குழந்தையான லிலிபெட்டுக்கு பெயர் வைக்கும் விழா, பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில், விண்ட்சர் மாளிகையில்தான் நடக்கவேண்டும் என ஹரியும் மேகனும் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம்.
இளவரசி டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக பிரித்தானியாவுக்கு வந்திருந்தபோதே, ஹரி இது தொடர்பில் பலருடன் பேசியதாக கூறப்படுகிறது.
மகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கான சந்தர்ப்பம் அமையும் வரை காத்திருப்போம் என ஹரி மேகன் தம்பதியர் தெரிவித்துள்ளார்களாம்.
ஆனால், ஒரு விடயம், ஹரி மேகன் தம்பதியரின் முதல் மகனான ஆர்ச்சியின் பெயர் வைக்கும் நிகழ்ச்சி விண்ட்சர் மாளிகையில்தான் நடத்தப்பட்டது என்றாலும், அதில் மகாராணியார் கலந்துகொள்ளவில்லை.
அவர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டிருந்தார்! ஆகவே, இப்போது தங்கள் மகளுடைய பெயர் வைக்கும் விழா விண்ட்சர் மாளிகையில் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளதுடன், அதுவும் கண்டிப்பாக பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில்தான் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்களாம் தம்பதியர்.