ராணி இறந்த தகவலை ஹரிக்கு ஒருவர் கூட சொல்லவில்லை! ஒன்லைன் மூலம் அறிந்த பரிதாபம்... ஷாக்கிங் தகவல்
ராணியார் மறைந்த செய்தியை ஓன்லைனில் பார்த்து அறிந்த ஹரி.
அரச குடும்பத்தை சேர்ந்த யாருமே இது குறித்து அவரிடம் சொல்லவில்லை என தகவல்.
மகாராணி உயிரிழந்த செய்தியை இளவரசர் ஹரிக்கு அரச குடும்பத்தை சேர்ந்த யாருமே தெரிவிக்கவில்லை எனவும், ஒன்லைன் மூலமே அவர் தெரிந்து கொண்டார் எனவும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை pagesix பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது பொதுவாக எல்லோரும் ஓன்லைனில் செய்தியை பார்த்து ராணி மரணத்தை தெரிந்து கொண்டதை போலவே தான் அவர் பேரனான ஹரியும் தெரிந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reuters, file photo
அதன்படி ராணியார் உயிரிழந்த ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரலுக்கு அவர் உயிர் பிரிந்த சில மணி நேரங்களுக்கு பின்னர் ஹரி வந்தார், அப்போது அவரின் முகத்தில் பதற்றமும் வேதனையும் பதிந்திருந்தது.
பக்கிங்காம் அரண்மையில் வட்டாரத்தின் தகவலின்படி அரச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ராணியின் மரணத்தைப் பற்றி கூற ஹாரியை உண்மையில் அழைக்கவில்லை என உறுதிப்படுத்தியதாக pagesix தெரிவித்துள்ளது.