இளவரசர் ஹரி அமெரிக்கா திரும்பி சிறிது நேரத்திலேயே வெளியிடப்பட்ட குடும்ப இரகசியங்கள்... மேகனால் மீண்டும் குடும்பத்துக்குள் பிரச்சினை
குடும்ப இரகசியங்களை தொடர்ந்து லீக் செய்துவரும் மேகனால் மீண்டும் ராஜ குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஹரி, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய சிறிது நேரத்திற்குள்ளேயே, சில குடும்ப இரகசியங்கள் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம், அமெரிக்க பத்திரிகையான People பத்திரிகை, மேகன் தன் குழந்தை ஆர்ச்சியுடன் மகாராணியாரிடம் தொலைபேசியில் தனிப்பட்ட விதத்தில் பேசிய தனிப்பட்ட விடயங்களை விவரமாக வெளியிட்டதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்ட குடும்ப விடயங்கள் இவ்வளவு சீக்கிரம் பத்திரிகைகளில் வெளியானதால் ராஜ குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது, இளவரசர் ஹரி, வில்லியம், கேட் ஆகியோர் சகஜமாக பேசிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி மக்களிடையே பாசிட்டிவான எண்ணங்களை ஏற்படுத்தின.
அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மக்கள் முழுமையாக அனுபவிக்கும் முன்பே, மேகன் பக்கத்திலிருந்து ஊடகங்களுக்கு கசியவிடப்படும் தகவல்களால் மீண்டும் எரிச்சலான ஒரு மன நிலை பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கின்போது வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஹரி மற்றும் வில்லியமுக்கிடையே உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருந்த நிலையில், இனி அது சந்தேகம்தான் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது.
மேகன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் எரிச்சலூட்டும் செயல்களால், ஹரி மற்றும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.