தாத்தாவின் இறுதிச்சடங்கின்போது புறக்கணிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் இளவரசர் ஹரி: அடுத்து எழுந்துள்ள முக்கிய கேள்வி
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்காக இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா திரும்பிய நிலையில், பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் சிலர் அவரை முற்றிலும் புறக்கணித்துள்ளனர்.
இதனால் ஹரி மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது, ஹரிக்கும் வில்லியமுக்கும் நடுவே பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டதை உலகமே பார்த்தது.
அதேநேரத்தில், இளவரசி கேட்டின் முயற்சியால் சகோதரர்கள் வில்லியமும் ஹரியும் சகஜமாக பேசிக்கொண்ட காட்சியையும் காண முடிந்தது. ஆனால், இளவரசி ஆன் உட்பட சிலர் ஹரியை முற்றிலும் புறக்கணித்துள்ளனர், அவர்கள் அவரது முகத்தைக் கூட பார்க்கவில்லையாம். இதனால் ஹரி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில், மற்றொரு முக்கிய கேள்வி எழுந்துள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் திகதி, கென்சிங்டன் மாளிகையில் இளவரசி டயானாவின் சிலை ஒன்று திறக்கப்பட உள்ளது. டயானா இறந்ததன் 20ஆவது ஆண்டை நினைவுகூருவதற்காகவும், அவர் பிரித்தானியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய நேர்மறை தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையிலும் அந்த சிலை நிறுவப்பட உள்ளது.
அந்த சிலையை இணைந்து நிறுவ இருப்பதாக ஏற்கனவே வில்லியமும் ஹரியும் தெரிவித்திருந்தார்கள். ஆனால், ஹரி தாத்தாவின் இறுதிச்சடங்கின்போது புறக்கணிக்கப்பட்டதால், அவர் டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில், ஹரியின் மனைவி மேகன் தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்க உள்ளதால், அதை ஒரு காரணமாக கூறி, ஹரி சிலை திறப்பை புறக்கணிக்கலாம் என ராஜ குடும்ப நிபுணரான Russell Myers என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.