மகாராணி மறைந்த அன்று ஹரிக்கு மட்டும் தனியாக உணவளிக்கப்பட்ட விடயம்: உண்மையாகவே ஹரி புறக்கணிக்கப்படுகிறாரா?
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று, ஹரிக்கு மட்டும் தனியாக உணவளிக்கப்பட்ட விடயம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையாகவே ஹரி புறக்கணிக்கப்படுகிறாரா?
பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று, ஹரி மட்டும் குடும்பத்துடன் சாப்பிட அனுமதிக்கப்படாமல், அவருக்கு தனியாக உணவளிக்கப்பட்ட விடயம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து, ஹரி புறக்கணிக்கப்படுகிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின.
முதலில் இராணுவ சீருடை அணிய அவருக்கு அனுமதியில்லை என்றும், பின்னர் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகி கவனம் ஈர்த்தன.
Credit: AFP
ஆனால், அதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்?
இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்து அரண்மனைக்குக் கொண்டு வந்ததிலிருந்தே ராஜகுடும்பத்தில் நிம்மதி காணாமல் போய்விட்டது.
தினமும் உதவியாளர்களுடன் சண்டை, இளவரசர் வில்லியம் மனைவியான கேட்டுடன் சண்டை என தொடர்ச்சியாக பிரச்சினைகள் உருவாக, ஒரு கட்டத்தில் மகாராணியார் தலையிட்டு ஹரியைக் கண்டிக்கும் நிலை உருவானது.
பின்னர் ஹரி பெரியவர்களைக் கேட்காமலே வீட்டை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறினார். அதன் பிறகும் மேகன் சும்மா இருக்கவில்லை. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ராஜகுடும்பத்தை அவமதிக்கும் விதத்தில் பேட்டி கொடுத்தார். மக்கள் நேரடியாக இளவரசர் வில்லியமிடம், ராஜகுடும்பத்தில் இனவெறியர்கள் யாராவது இருக்கிறார்களா என கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
Credit: AP
ஆக, இப்படி மேலும் மேலும் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த மேகன், மகாராணியாரின் இறுதிக்கணங்களில் அவரைக் காண வரக்கூடாது, அது முறையாக இருக்காது என்று கூறியுள்ளார் அப்போதைய இளவரசரும், இப்போதைய மன்னருமான சார்லஸ்.
அதனால்தான், கோபப்பட்டுக்கொண்டு தன் தந்தையுடன் சாப்பிட மறுத்துள்ளார் ஹரி. தங்களுடன் சாப்பிட ஹரிக்கு சார்லஸ் அழைப்பு விடுத்தும், ஹரிதான் தன் மனைவிக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்ற கோபத்தில் தந்தையுடன் சாப்பிடுவதை புறக்கணித்துள்ளாரேயொழிய, அவர் புறக்கணிக்கப்படவில்லையாம்.
மன்னருடைய அழைப்பை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று அல்ல. ஆனாலும், அதற்குப் பின்பும், மகாராணியாருக்கு மக்கள் மலர்கள் மூலம் அஞ்சலி செலுத்தும் காட்சிகளைக் காண ஹரிக்கும் மேகனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இளவசர் வில்லியம்.
Credit: PA:Press Association
அதேபோல, ஹரிக்கு இராணுவ சீருடை வழங்க அனுமதிப்பது குறித்து சர்ச்சை உருவான நிலையிலும், மகாராணியாரின் மற்ற ஏழு பேரப்பிள்ளைகளுடன் ஹரியும் இனைந்து சீருடை அணிந்து அஞ்சலி செலுத்த அனுமதியளித்துள்ளார் மன்னர் சார்லஸ்.
ஆக, ஹரி புறக்கணிக்கப்படுகிறார் என்று சொல்வதைவிட, ராஜகுடும்ப மரபுகளை மீறியதன் பலனை, ஒரு விவாகரத்தான அமெரிக்கப் பெண்ணை மணந்ததன் பலனை, இப்போது அனுபவிக்கிறார் என்று வேண்டுமானால் கூறலாம்.
மேலும், ஹரி வில்லியம் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ராஜகுடும்ப ரசிகர்களுக்கு இன்னமும் இருக்கும் நிலையில், மகாராணியாரின் மரணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின்போது, குடும்பப் பிரச்சினைகள் வெளியே தெரியவேண்டாம் என்பதற்காக, தற்காலிகமாகத்தான் ஹரியை ராஜகுடும்பம் தங்களுடன் இணைத்துள்ளது என்ற ஒரு கருத்தும் நிலவுவதை மறுப்பதற்கில்லை!
Credit: Getty