நாட்டிலிருந்து வெளியேறி விட்டாரா கோட்டாபய? இலங்கை விமானப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நாட்டிலிருந்து இன்று மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை விமானப்படை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தினூடாக சென்றுள்ளதாக இலங்கை விமானப்படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விடயத்தை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.