வித்தியாசமான காரணத்துக்காக பொதுமக்களுக்கு தனது கதவுகளைத் திறந்துவிட்ட ஜேர்மன் மசூதி
ஜேர்மன் நகரமொன்றிலுள்ள மசூதி ஒன்று வித்தியாசமான ஒரு காரணத்துக்காக பொதுமக்களை மசூதிக்குள் அனுமதித்துள்ளது. ரம்சானை ஈகைத்திருநாள் என அழைப்பார்கள்.
அதற்கிணங்க, இந்த ரம்சான் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி சகல மக்களுக்கும் உதவும் வகையில், ஜேர்மன் நகரமான Cologneஇலுள்ள மத்திய மசூதி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.
அதன்படி, அந்த மசூதியில் 2,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மசூதியின் தலைமைப் பொறுப்பு வகிப்பவரான Kazim Turkmen கூறும்போது, தடுப்பூசி திட்டத்துக்காக எங்கள் மசூதியை தேர்ந்தெடுத்த Cologne நகரம் மற்றும், Cologne மருத்துவர்கள் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், இது நமது கடமை என நான் கருதுகிறேன் என்றார்.