இன்று கொல்கத்தாவுடன் எலிமினேட்டர் போட்டி! பெங்களூர் அணியில் இருந்து 2 இலங்கை வீரர்கள் விடுவிப்பு.. காரணம் இதுதான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பெங்களூர் அணியிலிருந்து இரண்டு இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. டெல்லி அணியை ப்ளே ஆப்பில் வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும்.
பெங்களூர் அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா மற்றும் துஸ்மந்தா சமீரா ஆகிய இருவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
OFFICIAL ANNOUNCEMENT
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 11, 2021
Wanindu Hasaranga & Dushmantha Chameera have been released from the RCB bio bubble as they join up with the SL team for their #WT20 qualifiers.
We wish both of them the best & thank them for their professionalism & hard work during #IPL2021. #PlayBold pic.twitter.com/m8U2p4YaiK
இந்த இருவரும் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். இலங்கை அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல், குட்டி அணிகளுடன் இணைந்து தகுதி சுற்றிலிருந்து விளையாடவுள்ளது.
இந்த தகுதி சுற்றுகள் வரும் ஞாயிறு முதல் துவங்கும். இதற்காக, இலங்கை அணி நாளையும், வியாழக் கிழமையும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. இந்த பயிற்சி ஆட்டத்தின்போது ஹசரங்கா, சமீரா ஆகியோர் அணியில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்ததால்தான், இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஆர்சிபி விளக்கமளித்துள்ளது.
மேலும் இருவரும் சிறந்த வீரர்கள். ஐபிஎலில் ஆர்பிசிக்காக கடினமாக உழைத்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளது.