ஜேர்மனியிடம் ஆயுதங்கள் காலியாகிவிட்டனவா?: ரஷ்யா வெளியிட்டுள்ள செய்தி
ஜேர்மனி முதலான நாடுகளிடம் ஆயுதங்கள் காலியாகிவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.
ஜேர்மனி வழங்க இருந்த ஆயுதங்களின் அளவை பாதியாக குறைத்துவிட்டதாகவும், பல்கேரியா ஆயுதங்கள் வழங்குவதை மேலும் தாமதப்படுத்தி வருவதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.
அத்துடன், அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிக்கொண்டிருந்தால், இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவிடம் இருக்கும் ஆயுதங்கள் தீர்ந்துபோகும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் பெலாரஸ் நாட்டு ஊடகங்களோ, ரஷ்யா உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும், ஆனால், அமெரிக்கா போர்ப்பதற்றத்தைத் தொடர விரும்புவதாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஆனால், இந்த செய்திகள் எதுவும் உண்மையில்லை என்று கூறியுள்ள உக்ரைன் நாட்டின் போலித்தகவல்களை கண்டுபிடிக்கும் மையம் மற்றும் உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவை, அவை போலிச் செய்திகள் என்றும், ரஷ்யா வேண்டுமென்றே போலிச் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளன.