ஹரியை விட தவறு எதுவும் செய்யவில்லை... மேகன் மெர்க்கலிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சிய தந்தை தாமஸ்
தமது மகள் மேகன் மெர்க்கலிடம் பேச வேண்டும், நடந்தவை அனைத்திற்கும் மன்னிப்பு கேட்பதாகவும் தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்ட பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக தாமஸ் தமது மகளுடன் தொடர்பில் இல்லை. தமக்கும் மேகன் மெர்க்கலுக்கும் பிரிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தாம் குழம்பிப்போயுள்ளதாக கூறும் தாமஸ் மெர்க்கல்,
மேகன் மெர்க்கலுக்கு ஆண் பிள்ளை பிறந்த போதும் தாம் சந்திக்கவில்லை, தற்போது பெண் பிள்ளை பிறந்துள்ளது, இந்தமுறை கண்டிப்பாக தாம் பேத்தியை கொஞ்ச வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் தவறு செய்திருக்கிறேன். அதற்காக நான் நூறு முறை மன்னிப்பு கேட்கிறேன். நான் ஏதாவது மோசமான தவறு செய்திருந்தால், அதனால் தண்டிக்கப்பட்டால், அது சரியான முடிவு, ஆனால் நான் செய்யவில்லை என்பதே உண்மை என தாமஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஓப்ரா வின்ஃப்ரே உடனான நிகழ்ச்சியில், தமது தந்தை தமக்கு துரோகமிழைத்துவிட்டார் எனவும், அந்த உறவு தற்போது சமரசம் செய்து கொள்ளும் நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார் மேகன் மெர்க்கல்.
இந்த நேர்காணல் உலகமெங்கும் கவனத்தை ஈர்த்த நிலையில், தாமஸ் மெர்க்கல் இளவரசர் ஹரியை குற்றப்படுத்தியதுடன், தமது மகள் தற்கொலை எண்ணத்தில் அவதிக்குள்ளான போது இளவரசர் ஹரியால் போதுமான உதவியை அளிக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த சம்பவம் தம்மை கவலை கொள்ள வைத்ததாகவும், மேகன் மெர்க்கல் எளிதாக தம்மை நாடி இருக்கலாம் எனவும், அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரையாவது அவர் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
நாம் அனைவரும் தவறு செய்திருக்கிறோம், ஆனால் ஹரி போன்று ஒருபோதும் நான் தவறு செய்ததில்லை எனவும் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் 70 மைலகள் தொலைவில் மட்டுமே தாம் குடியிருப்பதாகவும், பேரப்பிள்ளைகள் இருவரையும் சந்திக்கும் வேளையை எதிர்பார்ப்பதாகவும் தாமஸ் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.