இங்கிலாந்துக்கு எதிராக இன்று இவர் விளையாடமாட்டார்! இளம் இந்திய வீரர் குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 3வது நாள் பீல்டிங்கின் போது காயமடைந்த இந்திய இளம் வீரர் சுப்மன் கில்-ன் உடல்நலம் குறித்து பிசிசிஐ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடந்து வரும் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
34 ஓவர் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்கள் எடுத்துள்ள இங்கிலாந்து அணி, 482 என்ற இமலாய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
UPDATE - Shubman Gill sustained a blow on his left forearm while fielding on Day 3 of the 2nd Test. He has been taken for a precautionary scan. The BCCI Medical Team is assessing him. He won't be fielding today.#INDvENG pic.twitter.com/ph0GJsqpFi
— BCCI (@BCCI) February 16, 2021
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி, இரண்டாவது டெஸ்டின் 3வது நாள் பீல்டிங் செய்யும் போது சுப்மன் கில்-க்கு இடது முன்கையில் காயம் ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கையாக அவருக்கு தற்போது ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ மருத்துவ குழு அவரை மதிப்பீடு செய்து வருகின்றனர். அவர் இன்று(4வது நாள்) பீல்டிங் செய்ய மாட்டார் என தெரிவித்துள்ளது.