ஆறாத சர்க்கரை நோய் புண்கள் குணமாக வேண்டுமா? இதோ சில வழிகள்
பொதுவாக சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் ஏற்பட்டால் அவை ஆறுவது சிரமமாகும். பல நேரங்களில் விரல்களையோ காலையோ இழக்க நேரிடலாம். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.
எனவே இந்த புண் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதனை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
காலில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
- நரம்பு பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை.
- இரத்தக்குழாயில் அடைப்பினால் கால் / விரல்களுக்கு இரத்த ஓட்டம் குறைவு.
- இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக இருப்பது.
- சரியான காலணிகள் இல்லாதிருப்பது அல்லது காலணிகளே இல்லாமல் நடப்பது.
எப்படி தடுப்பது?
- தினமும் கால்களை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- எப்போதும் செருப்பு அணிந்து நடக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மென்மையான செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
- சிறிய காயம், புண் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
சித்த மருத்துவம்
ஆவாரம் இலை மற்றும் பூவை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறு அனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதனை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.