தினமும் அரை ஸ்பூன் பப்பாளி விதைகள் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
பப்பாளி மரத்தி்ல் பழம் இலை, பப்பாளி விதை என பல நன்மை தரும் விஷயங்கள் அடங்கியுள்ளது. ஆனால் அதில் இருந்து பப்பாளி பழத்தை மட்டுமே நாம் எடுத்தக்கொள்கிறேமே தவிர அதன் இலை மற்றும் விதைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்தக்கொள்வதில்லை.
ஆனால் பப்பாளி பழத்தை விட அதன் விதையில் அதிக நன்மைகள் இருக்கிறது.பப்பாளி விதைகள் சில நோய்களுக்கு தீர்வாகவும் அமைகிறது.
இந்த விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பப்பாளி விதைகள் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்தவகையில் பப்பாளி விதைகளை தினமும் எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பப்பாளி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் உடலில் ஏற்படும் சேதத்தை தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- பப்பாளி விதையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம்முடைய குடல் இயக்கத்தை சீராக்கி, குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
- பப்பாளி விதை நம்முடைய உடலின் செரிமானத்தை சீராக வைத்து, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன. அவை நமது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை நம் உடல் உறிஞ்சுவதை தடுக்கவும் உதவுகின்றன. இதனால் எல்டிஎல் கொலஸ்டிரால் உடலில் தேங்காமல் உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- பப்பாளி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால கொலஸ்டிரால் கட்டுக்குள் இருக்கும்.
- பப்பாளி விதைகளில் நம்முடைய உடலை புற்றுநோய்களில் இருந்து காக்கிறது. அதேபோல பப்பாளி விதைகளில் ஐசோதியோசயனேட் உள்ளது. இது புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் தடுக்கிறது.
- பப்பாளி விதைகள் நம்முடை இதயத்தை பாதுகாக்கின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்டிரால் ஆகியவை கட்டுக்குள் வரும். இவற்றை கட்டுக்குள் வைத்திருந்தாலே இதய நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும்.
- உடலில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறைக்க பப்பாளி விதைகள் உதவுகின்றன. மேலும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கவும் பப்பாளி விதைகள் உதவும்.
- பப்பாளி விதையை சாப்பிடுவதோடு கால் ஸ்பூன் அளவு விதையை சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமத்தின் எலாஸ்டிசிட்டி அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள், சருமச் சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
- பப்பாளி விதைகளை தினமும் கால் ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலை ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ், ஷிகெல்லா டைசென்டீரியா, சால்மோனெல்லா டைஃபி, சூடோமோனாஸ் ஏருஜினோசா, எஸ்கெரிச்சியா கோலி போன்ற நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
- பப்பாளி விதைகள் மாதவிடாயைத் தூண்டவும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் தசை பிடிப்புகளை குறைக்க உதவுகிறது.
- தினமும் 3 முதல் 4 பப்பாளி விதைகளை நசுக்கி, எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் அழற்சி போன்ற பிரச்சினைகள் சரியாகும். கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.