ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா? தினமும் ஒரு காய் மறக்காமல் சாப்பிடுங்க
பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
இதன் தாவரப் பெயர் பைரஸ்கம்யூனிஸ் (PYRUS COMMUNIS) ஆகும். பேரிக்காய், ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால், இதை "ஏழைகளின் ஆப்பிள்' என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
பேரிக்காயில் புரதம், மாவுப்பொருள்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து மக்கள் பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் "கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள்.
இது பல அற்புத மருத்துப்பலன்களை கொண்டது. தினம் ஒரு காய் சாப்பிடுவதனால் உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.
அந்தவகையில் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பேரிக்காய் அதிகமாக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- பேரிக்காய் இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது, இது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
- பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.
- பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீரால் ஆனது, அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. எனவே எடை இழப்பிற்கு உதவுவதோடு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.
- பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கு அதிகமாக உதவுகிறது, மேலும் இது மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
- கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.
- சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.