தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?
Cancer
Constipation
dental problem
By Kishanthini
கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது.
மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
இதனை காலை வேளையில் 2 எடுத்து கொள்வதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை அள்ளித்தருகின்றது. தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம்.
- கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலை எந்த நோய்த்தொற்றுகளும் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். அதோடு நோய்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது.
- காலையில் கிராம்பை உட்கொள்வது செரிமான பிரச்சினைகளுக்கு உதவும். கிராம்பு செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறத. எனவே மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது.
- கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, நீங்கள் தினமும் கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும். கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- கிராம்பு பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும், உங்கள் பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.
- தலைவலி நிவாரணத்திற்காக நீங்கள் அவற்றை உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் பாலுடன் கிராம்பு தூள் கலந்து குடிக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நுகர்ந்தால் கூட நிவாரணம் கிடைக்கும்.
- கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.
- காலையில் 2 கிராம்புகளை வாயில் அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். இது உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு சிறந்தது.
- நீரிழிவு நோயாளிகள், தினம் உணவில் கிராம்பு சேர்க்க வேண்டும். கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன.
- கிராம்புகளில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் உடலில் புற்றுநோய் செல்கள் இறப்பை அதிகரிக்கும்.
- காலையில் அவற்றை மென்று சாப்பிட்டாலோ அல்லது அப்படியே வைத்திருந்தாலோ அன்றைய நாள் முழுவதும் உங்களை மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் உணர வைக்கும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US