உடலிற்கு வலுசேர்க்கும் சத்தான கருப்பு உளுந்து கஞ்சி.., எப்படி செய்வது?
பழங்காலங்களில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான காலை உணவுகளில் இந்த உளுந்து கஞ்சி ஒன்றாகும்.
அந்தவகையில், உடலிற்கு வலுசேர்க்க உதவும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து கஞ்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- ¼ கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- வெல்லம்- ¾ கப்
- ஏலக்காய் தூள்- 1ஸ்பூன்
- தேங்காய் பால்- 1 கப்
- நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
- பாதாம்- 10
- தேங்காய் துருவியது- ¼ கப்
செய்முறை
முதலில் உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பின் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறினால் ஒரு 5 -10 நிமிடத்தில் இது நன்கு கொதித்து கெட்டியாகி வரும்.
அடுத்து ஒரு தாளிப்பு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பாதாம் மற்றும் துருவிய தேங்காய் போட்டு தாளித்து உளுந்தங்கஞ்சியில் சேர்த்தால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |