பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் 8 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை! அவர் செய்த குற்றம் என்ன?
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான ஹீத் ஸ்ட்ரீகுக் 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தான் இந்த தடையை விதித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக புகழப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக்.
2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது, ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக, லஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங் தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது. இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 2029-ம் ஆண்டு, மார்ச் 29-ம் திகதி தான் சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ ஹீத் ஸ்ட்ரீக் செயல்படமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.