தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழகத்தில் நேற்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
அதேபோல், இன்று கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மழையின்போது மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் மிதமான மழை நீடிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |