தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனைதொடந்து, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |