தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு வரும் 5ஆம் திகதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |