தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிககனமழை பெய்யும்- வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோன்று, நாளை கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நகரின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |