மொத்தமாக ஆற்றில் சரிந்த குடியிருப்பு: கேரளாவை புரட்டியெடுக்கும் கனமழை, நிலச்சரிவு
இந்திய மாநிலம் கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர் எண்ணிக்கை 21 என உயர்ந்து உள்ளது.
கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் பகுதியில், ஆற்றோரம் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்று மொத்தமாக சரிந்துள்ள காட்சிகள் வெளியாகி, பார்ப்பவர்களை உலுக்கி வருகிறது.
Every disaster gets a grim leitmotif. Here’s the one for the terrifying flood havoc in Kerala right now. Image from Mundakayam in Kottayam district. Prayers for relief, rescue & rehab. pic.twitter.com/ZS8cFTnmku
— Shiv Aroor (@ShivAroor) October 17, 2021
மட்டுமின்றி கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரனமடைந்தோர் எண்ணிக்கை 21 என அதிகரித்துள்ளது. கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேரும், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேரும் மரணமடைந்துள்ளனர்.
பூவஞ்சி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 23 பேரில் இதுவரை 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை உயரக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.