ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு..! பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
ஜேர்மனியில் பல்கலைக்கழக செலக்சரர் அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Heidelberg நகரத்தில் உள்ள Neuenheimer Feld பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலில், தனிநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், அவர் பெரிய துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்ததாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை.
இச்சம்பவத்தை தொடர்ந்து நகரத்தின் Neuenheimer Feld பகுதியில் அவசரகால சேவைகள் உட்பட ஒரு பெரிய நடவடிக்கை நடந்து வருகிறது.
மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் சுதந்திரமாக பணியில் ஈடுபட வேண்டும் என்பதால், அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.