பிரித்தானிய இளவரசி டயானா தற்போது உயிருடன் இருந்திருந்தால்! சிலிர்க்க வைக்கும் புகைப்படம்
இளவரசி டயானா உயிருடன் தற்போது இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார்.
ஆச்சரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல புகைப்பட கலைஞர்.
துருக்கியை சேர்ந்த பிரபல ஓவியரும், புகைப்பட கலைஞருமான அல்பர் யேசில்டஸ் பிரித்தானிய இளவரசி டயானா உயிரோடு இருந்திருந்தால் தற்போது எப்படியிருப்பார் என்பதை காட்டும் ஆச்சரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதே போல மைக்கேல் ஜாக்சன், ஹித் லெட்ஜர், பவுல் வால்கர் போன்ற மறைந்த பிரபலங்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் டயானா இப்போது உயிருடன் இருந்திருந்தால் எப்படியிருப்பார் என்ற புகைப்படம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அல்பரின் இன்ஸ்டாகிராம் பதிவில், அவருக்கு எதுவும் ஆகாமல் இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார் என பதிவிட்டுள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை பெரியளவில் ஈர்த்துள்ளது.
இதையடுத்து பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர், டயானா மீண்டும் உயிருடன் வந்துவிட்டது போலவே உள்ளதாக சிலாகிக்கின்றனர். இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் தன்னுடைய 36வது வயதில் உயிரிழந்தார்.
தற்போது டயானா உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 61 வயது இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது