விலை உயர்வை அறிவித்த Hero நிறுவனம்: ஜூலை 1 முதல் அமுல்
இரு சக்கர வாகனம் தயாரிப்பாளரான Hero நிறுவனமானது தங்களின் தெரிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
விலை உயர்வு மாறுபடும்
இதனால் ரூ 1500 வரையில் ஒவ்வொரு வாகனத்திற்கும் விலை உயர்வு இருக்கும் என்றும், ஜூலை 1 முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம் என்பது ரூ 1,500 வரை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட மொடல் மற்றும் சந்தையைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும் எனவும் விளக்கமளித்துள்ளனர். மே மாதத்தில் மட்டும் Hero நிறுவனம் 498,123 எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.
ஆனால் 2023 மே மாதத்தில் விற்பனை எண்ணிக்கை 519,474 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 4.1 சதவிகிதம் விற்பனையில் சரிவடைந்துள்ளது.
ஏற்றுமதியானது 67 சதவிகிதம்
இந்த ஆண்டு மே மாதத்தில் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் 4.71 லட்சம் விறபனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மே மாதம் 4.89 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக Hero நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்கூட்டர்களை பொறுத்தமட்டில் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. அதாவது இந்த மே மாதம் 26,937 அலகுகள் விற்பனையாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு 30,138 எண்ணிக்கை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் விற்பனை மொத்தமாக 5.7 சதவிகிதம் சரிவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு ஏற்றுமதியானது 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |