லண்டன் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கழிவறையில் இருந்த 2 ரகசிய கமெரா! பொலிஸார் வெளியிட்ட முக்கிய புகைப்படம்
லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழத்தின் பெண்கள் கழிப்பறையில் இரண்டு ரகசிய கமெரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுடுத்தியுள்ளது.
மேற்கு லண்டனில் அமைந்துள்ளது செண்ட் மேரி பல்கலைக்கழகம். இங்குள்ள பெண்கள் கழிவறையில் சமீபத்தில் இரண்டு கமெராக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகத்துக்குள் கடந்த மாதம் இறுதியில் ஆண் ஒருவர் வந்திருக்கிறார்.
அவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் கையில் செல்போனுடன் அவர் நடந்து போவது தெரிகிறது.
மேலும் பெண்கள் கழிவறையில் கமெராக்கள் இருந்தது தொடர்பாக பொலிசார் அவரிடம் பேச வேண்டும் என நினைக்கிறார்கள். அ
ந்த நபர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.