நெல் வயலில் இருந்த மீன்வலை! அதில் வந்து சிக்கிய ஆசியாவின் கொடிய விஷப்பாம்பு... ஒரு திக் திக் வீடியோ
இந்தியாவில் மீன்பிடி வலையில் மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பு வந்து சிக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மங்கல்பூரில் உள்ள ஒரு நெல் வயலில் மீன்பிடி வலை வைக்கபட்டிருந்தது. அங்கு ஒரு விவசாயி வந்து பார்த்த போது Banded krait வகை கொடிய பாம்பு வலைக்குள் வந்து சிக்கி கொண்டதை கண்டார்.
இதையடுத்து ஊர்மக்கள் அங்கு ஒன்றுகூட பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் வந்து வலையோடு பாம்பை பிடித்தனர்.
பின்னர் வலை அறுக்கப்பட்ட பாம்பு வெளியில் எடுக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
ஆசியாவில் காணப்படும் மிகவும் அதிக விஷம் கொண்ட பாம்பு வகைகளில் Banded krait பாம்பு முக்கியமானதாகும்.
அதே சமயம் மனிதர்கள் அதிகம் உள்ள இடங்களை அது தவிர்க்கும் என தெரியவந்துள்ளது.