எப்ஸ்டீன் கோப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டிய ஹிலாரி கிளிண்டன்
எப்ஸ்டீன் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் மீதான விசாரணையைத் திசைதிருப்ப, தாமும் பில் கிளிண்டனும் காங்கிரஸ் முன் சாட்சியமளிக்க கட்டாயப்படுத்தப்படுவதாக ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதித்துறை மெத்தனம்
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் குற்றப் பட்டியல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதில் அமெரிக்க நீதித்துறை மெத்தனம் காட்டுவதாக கிளின்டன் கூறியுள்ளார்.

மொத்த ஆவணங்களும் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அமெரிக்க நீதித்துறை இதுவரை வெளியிட்டுள்ள ஆவணங்கள் தவிர்த்து, மேலும் 3 மில்லியன் ஆவணங்கள் வெளியிடத் தயாராக உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய கிளிண்டன், அவரும் அவரது கணவர் பில் கிளிண்டனும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் முன் சத்தியப்பிரமாண வாக்குமூலங்களை வழங்கத் தயாராவதாக தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 26 ஆம் திகதி ஹிலாரி கிளிண்டன் சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டுள்ள அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மறுநாள் ஆஜராவார்.
கடந்த 40 ஆண்டுகளில் நாடாளுமன்றக் குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சாட்சியமளிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரான கிளிண்டன்,
மற்ற சாட்சிகளுடன் ஒப்பிடும்போது தானும் தனது கணவரும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். ஆண்ட்ரூ குறித்து பதிலளித்த கிளிண்டன், சாட்சியம் அளிக்கக் கோரப்பட்ட அனைவருக்கும் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
ட்ரம்பின் மீதான விசாரணை
மேலும், எதுவும் நியாயமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கணவருக்கும் எனக்கும் அவ்வாறு நடத்தப்படவில்ல, ஏனென்றால் மற்ற சாட்சிகளிடம் சாட்சியமளிக்கக் கேட்கப்பட்டபோது, அவர்கள் சத்தியப்பிரமாணத்தின் கீழ் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வழங்கினர் என்றார்.
இது பழிவாங்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள கிளிண்டன், ஜனாதிபதி ட்ரம்பின் மீதான விசாரணைத் திசைத் திருப்பவே இந்த நாடகம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை வெளியிடப்பட்ட கோப்புகளில் ஆயிரக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ள ட்ரம்ப், கிளிண்டனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம், தான் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டதாகக் கூறினார்.
பில் கிளிண்டனும் கோப்புகளில் இடம்பெற்றுள்ளார், ஆனால் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த பிறகு எப்ஸ்டீன் உடனானத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
பில் கிளிண்டன் தவறு செய்யவில்லை என்று மறுத்துள்ளார், மேலும் அனைத்து கோப்புகளையும் வெளியிட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |