இஸ்லாமிய பெண்களுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்து மதபோதகர்! சர்ச்சை வீடியோ
இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் மசூதி வாசலில் நின்று பொது மக்கள் மத்தில் பிரச்சாரம் செய்த இந்துமத போதகர் ஒருவர், அற்ரவரங்களுக்கு மத்தியில் முஸ்லிம் பெண்களை கடத்தி கற்பழிக்க முடியும் என மிரட்டல் விடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்தின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில் உத்தரபிரதேச பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
காவி உடை அணிந்த கைராபாத் என்ற சிறிய நகரத்தில் உள்ள உள்ளூர் மதபோதகரான அவர், ஜீப்பிற்குள் இருந்து கூட்டத்தில் உரையாற்றுவதை வீடியோ காட்டுகிறது. அவருக்கு பின்னால் சீருடையில் பொலிஸார் ஒருவர் நிற்பதையும் பார்க்க முடிகிறது.
ஒலிவாங்கியில் பேசுகையில், அங்கிருந்த பொது மக்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கூச்சலிட்டு அவரை உற்சாகப்படுத்தியபோது, அந்த நபர் வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை முன் வைக்கிறார்.
TRIGGER WARNING!
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022
A Mahant in front of a Masjid in the presence of Police personals warns that He would K!dnap Muslim Women and ₹@pe them in Open.
According to the locals near Sheshe wali Masjid, Khairabad, Sitapur. This happened on 2nd Apr 2022, 2 PM. @sitapurpolice @Uppolice pic.twitter.com/wkBNLnqUW0
மேலும், அந்த நபர் தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டுகிறார், அதற்காக ருபாய் 28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஒரு முஸ்லிம் அந்தப் பகுதியில் உள்ள எந்தப் பெண்ணையும் துன்புறுத்தினால், முஸ்லிம் பெண்களைக் கடத்தி, பொதுவெளியில் பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று அவர் கூறுகிறார். இந்த அச்சுறுத்தலை கூட்டத்தினர் பலத்த ஆரவாரத்துடன் வரவேற்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வீடியோவைப் பகிர்ந்த, உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைர், இந்த வீடியோ ஏப்ரல் 2 அன்று படமாக்கப்பட்டது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகும் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த சீதாபூர் காவல்துறை, ஒரு மூத்த அதிகாரி இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஜுபைரின் வீடியோ பதிவைத் தொடர்ந்து, பல ட்விட்டர் பயனர்கள் மதத் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் கடுமையான தலையீடு கோரி ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடம் பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.