இலங்கை அணியின் அதிரடி வீரர் திசாரா பெரேரா திடீர் ஓய்வு அறிவிப்பு! ரசிகர்கள் ஷாக்
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் திசார பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியில் பல மூத்த வீரர்களை கைவிடுவது குறித்து இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இலங்கை அணியின் ஆல்ரவுண்டரும், மூத்த வீரருமான 32 வயது மதிக்கத்தக்க திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஒருநாள் சுற்றுப்பயணங்களுக்கு இலங்கை ஒருநாள் அணியில் இருந்து பல மூத்த கிரிக்கெட் வீரர்களை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் அறிவித்திருந்தனர்.
மூத்த வீரர்களான திமுத் கருணாரத்ன, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல், சுரங்கா லக்மல் மற்றும் திசாரா பெரேரா ஆகியோரை வரவிருக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர் சுற்றுப்பயணங்களுக்கு தேர்வாளர்கள் பரிசீலிக்க வாய்ப்பில்லை என்று மூத்த எஸ்.எல்.சி அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், திசாரா பெரேரா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.