முல்லைக்கே தேர்கொடுத்த பாரியின் தலையை கொய்து தண்ணீர் வழங்கிய எதிரிகள்! வஞ்சம் தீர்க்கப்பட்ட வரலாறு
நாம் சிறுவயதில் “முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி” என்ற கதையை படித்துள்ளோம். இதில் வரும் மன்னன் தான் பாரி.
இவர் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் கடையெழுவள்ளல்களில் தலைசிறந்த மன்னராக கருதப்பட்டவர்.
ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால் அதனை கண்டு மனம்துடித்து தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் இவர்.
இவர் சிறிய பகுதிகளை ஆட்சி செய்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே.
கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்.
அவரது ஆட்சிக்காலம், இவரது இறப்பு எப்படி இருந்தது என்று முழுமையாக தெரிந்து கொள்வோம்.