$1 மில்லியன் மதிப்பிலான வீட்டில் புகுந்த பாம்புகளை விரட்ட உரிமையாளர் செய்த தவறான செயலால் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவில் நெருப்பு புகையை பயன்படுத்தி வீட்டில் உள்ள பாம்புகளை விரட்ட உரிமையாளர் முயன்ற நிலையில் வீடு முழுவதும் தீப்பிடித்து நாசமாகியுள்ளது.
Montgomery கவுண்டியில் உள்ள $1 மில்லியன் மதிப்பிலான வீடே முழுவதுமாக எரிந்துள்ளது.
அதன்படி வீட்டின் உரிமையாளர் வீடுகளில் உள்ள பாம்பு தொல்லைகளில் இருந்து மீள தவறான ஒரு முயற்சியை கையாண்டார். அதாவது நிலக்கரியை எரித்து அந்த புகையை பரப்பவிட்டார்.
ஆனால் துரதிஷ்டவசமாக வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அடித்தள சுவர்கள் மற்றும் தளங்களில் தீ பிடிக்க ஆரம்பித்து பின்னர் மேல்நோக்கி பரவியது, இறுதியில் $1 மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியது.
அக்கம் பக்கத்தினர் தீ பற்றி எரிவதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அந்த இடத்தில் பாம்புகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம் சில பாம்புகள் அங்கிருந்து வெளியேறியிருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த தீவிபத்தானது தற்செயலானது என புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ள நிலையில் காப்பீட்டு தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது.
ICYMI - Update Big Woods Rd, house fire 11/23; CAUSE, accidental, homeowner using smoke to manage snake infestation, it is believed heat source (coals) too close to combustibles; AREA of ORIGIN, basement, walls/floor; DAMAGE, >$1M; no human injures; status of snakes undetermined https://t.co/65OVYAzj4G pic.twitter.com/xSFYi4ElmT
— Pete Piringer (@mcfrsPIO) December 3, 2021