திடீரென்று கேட்ட அலறல் சத்தம்... தலை சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 8 வயது சிறுமி: கண்ணீரில் குடும்பம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பளிங்கு கைப்பிடி ஒன்று சரிந்து விழுந்ததில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரின் வெஸ்ட்செஸ்டர் சதுக்கம் பகுதியிலேயே திங்களன்று இரவு சுமார் 8 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் வெளியிடப்படாத அந்த 8 வயது சிறுமி தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குடியிருப்பின் முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனிடையே, இருவர் பளிங்கு கைப்பிடி நெடுவரிசையை லேசாக நகர்த்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தவறி கீழே சரிந்து விழுந்துள்ளது. இதில் வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியின் தலை மீது நேராக பதித்துள்ளது.
சிறுமி திடீரென்று அலறவே, குடியிருப்பினுள் உறவினர்களுடன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த தாயார் விரைந்து வெளியே வந்து பார்த்துள்ளார். பளிங்கு கைப்பிடியின் அடியில் சிக்கியிருந்த சிறுமியை படுகாயத்துடன் மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
ஆனால் பளிங்கு கைப்பிடி தலையில் நேராக விழுந்ததால் பலத்த காயம் பட்ட சிறுமி, மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் மரணமடைந்துள்ளார். தலை சிதைந்த நிலையில் சிறுமி மரணமடைந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் நியூயார்க் நகர பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருவதுடன், கட்டிடத்தின் உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த கட்டிடம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, ஒருசில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே இந்த குடும்பம் புதிதாக இந்த குடியிருப்புக்கு குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.