கைக்கு அடங்காமல் முடியின் பின்னலை அதிகரிக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய்- 10
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
தயாரிக்கும் முறை
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி, சுத்தம் செய்து உலர வைக்கவும்.
பின் நெல்லிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க விடவும்.
எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறியதும் அடுப்பை அனைத்து எண்ணெயை நன்கு ஆறவிடவும்.
இதற்கடுத்து எண்ணெயை ஒரு பருத்தி துணியில் ஊற்றி பிழிந்து எடுக்கவும்.
வடிகட்டிய நெல்லிக்காய் எண்ணெயை, உலர்ந்த கண்ணாடி பாட்டில் ஊற்றி தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |