இந்த ஒரு இலை போதும்.., முழங்கால் வரை முடி வளர உதவும் எண்ணெய் தயாரிக்கலாம்
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி உதிர்வை நிறுத்தி வேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- வெற்றிலை- 10
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
பின் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலைகளை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
வெற்றிலை கருப்பாக மாறியதும், இந்த எண்ணெயை நன்கு ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இந்த எண்ணெயை உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்றாகத் தடவவும்.
அடுத்து 30 நிமிடங்கள் தலைமுடி நன்கு ஊறியது மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிறுத்தி முடி நன்கு வளர ஆரம்பிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |