முகப்பொலிவை அதிகரிக்க வீட்டில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்களுக்கு பொதுவாக முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.
அந்தவகையில், முகத்தில் உடனடி பளபளப்பை பெற வீட்டில் உள்ள மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
இதற்கடுத்து மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |