நிரந்தரமாக நரைமுடியை கருப்பாக்க உதவும் பச்சை எண்ணெய்- எப்படி தயாரிப்பது?
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் கறிவேப்பிலை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
- கறிவேப்பிலை- 2கைப்பிடி
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
பின் கறிவேப்பிலையை உலர வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து கொதிக்கின்ற தேங்காய் எண்ணெயில் அரைத்த கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.

எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அதனை ஆறவைத்து ஒரு துணியில் வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி நன்கு வளரும் மற்றும் நரைமுடியை நிரந்தரமாக நீக்க உதவும்.
இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து நன்கு மசாஜ் செய்யவும்.
இறுதியாக மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |