நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?
ஆண், பெண் என இருவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை எடுத்து லேசாக சூடுபடுத்தவும்.
எண்ணெய் நினைக்க கொதித்து நிறம் மாறி வந்ததும் ஆறவைத்து பிறகு தலைமுடியில் தடவவும்.

அடுத்து 2 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம்.
இதை வாரத்திற்கு 2 முறை செய்யதால் இளநரை மறைந்து கருமையான கூந்தலுக்கு வழிவகுக்கும்.
2. தேவையான பொருட்கள்
- தயிர்- 1 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கறிவேப்பிலை பொடியாக அரைத்து அதனுடன் தயிர் எடுத்துக் நன்றாக கலந்து அதன் பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் இதனை தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருந்து தலையை அலசிக்கொள்ளலாம்.
இதை வாரத்திற்கு 2 முறை என் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நரைமுடி மறையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |