மென்மையான கூந்தலை பெற இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 5 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பின் இயற்கையான கற்றாழை ஜெல்லை எடுத்து தேங்காய் எண்ணெய்யில் நன்றாக கலக்கவும்.

நன்றாக கலந்த பிறகு 3 நிமிடம் அப்படியே வைத்து பின் முடியில் தடவ வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவி மென்மையான ஷாம்பு பயன்படுத்தலாம்.
இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தலைமுடிபளபளப்பாகத் தொடங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |