சரும பொலிவை அதிகரிக்க உதவும் தேன்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், சரும பொலிவை அதிகரிக்க தேனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேன்- 2 ஸ்பூன்
- காய்ச்சாத பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து, அத்துடன் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இது சருமத் துளைகளை ஆழமாக நீரேற்றமடையச் செய்து, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்க உதவுகின்றன.
2. தேவையான பொருட்கள்
- தேன்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தேனை எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |