வேகமாக முகத்தை வெள்ளையாக்க இந்த 2 பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக வீட்டில் உள்ள பீட்ரூட் , காபி தூளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- காபி தூள்- 2 ஸ்பூன்
- கொண்டைக்கடலை மாவு- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட்டின் சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் காபி தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் கொண்டைக்கடலை மாவைச் சேர்த்து பேஸ்ட் கலக்கவும்.
இந்த பேஸ்ட் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது ரோஸ் வாட்டரைச் சேர்த்து கலந்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து முகத்தை சுத்தம் செய்த பிறகு, இந்த பேக்கைப் முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் நன்கு பொலிவாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |