முகத்தில் உடனடி பளபளப்பை கொண்டு வர உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக பெண்களுக்கு முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
இருந்தாலும் அனைத்து பெண்களும் எப்போதும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
அந்தவகையில், முகத்தில் உடனடி பளபளப்பை கொண்டு வர உதவும் பேஸ்பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- காபி தூள்- ½ ஸ்பூன்
- சர்க்கரை- 4 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- தேன்- சிறிதளவு
- ரோஸ் வாட்டர்- சிறிதளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், காபி தூள் மற்றும் சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும்.

அடுத்து பேஸ்பேக் பதத்திற்கு வரும்வரை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்துவிட்டு அரை மணி நேரத்திற்குப் பின்னதாக குளிர்ந்த நீரால் நன்கு கழுவிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் உடனடியாக பளபளப்பாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |