நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை டை: எப்படி தயாரிப்பது?
அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
அந்தவகையில், இயற்கையாக வீட்டிலேயே டை தயாரித்து பயன்படுத்துவதால் ஆரோக்கியமான கருமையான கூந்தலை பெறலாம்.
1. தேவையான பொருட்கள்
- மருதாணி பொடி- 3 ஸ்பூன்
- வெந்நீர்- 1 கப்
பயன்படுத்தும் முறை
மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்பு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இந்த மருதாணி பேஸ்ட் தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.
2. தேவையான பொருட்கள்
- காபி- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 1 கப்
பயன்படுத்தும் முறை
காபியை நன்றாக காய்ச்சி ஆறியபின்பு அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு தலைமுடியை அலசிவிடலாம். காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |