நரைமுடியை இயற்கை முறையில் கருப்பாக்க உதவும் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெற்றிலை- 15
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கடுகு எண்ணெய்- ½ கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை- 5
எப்படி தயாரிப்பது?
முதலில் வெற்றிலைகளை சுத்தமாக கழுவி நிழலில் உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
அடுத்து இதில் செம்பருத்தி இலைகள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைக்கவும்.
எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் இதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிறைந்தமாக மறைந்து கருமையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |