முழங்கால் வரை முடி வளர இந்த 2 பொருள் போதும்.., மூலிகை எண்ணெய் தயாரிக்கலாம்
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சி முதல் நரைமுடியை கருப்பாக்குவது வரை இந்த ஒரு கருஞ்சீரக எண்ணெய் போதும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் கருஞ்சீரகத்தை நன்கு உலரவைத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பின்னர் எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெயை ஆறவைக்கவும்.
இறுதியாக இதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலைமுடியின் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |