முடி உதிர்வை தடுத்து நீளமான கூந்தலை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியம்
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான நீளமான கூந்தலை பெற உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 3 கப்
- செம்பருத்தி இலை- 5
- செம்பருத்தி பூ- 4
- விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை கழுவி பின் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அரிசி பாதி வெந்து வந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்கவும்.
பின் அதனை நன்கு ஆறவைத்து ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர தலைமுடி உதிர்வதை தடுத்து நீளமான கூந்தலை பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |