எலி வால் போல் இருக்கும் முடியை அடர்த்தியாக்கும் அரிசி.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான நீளமான கூந்தலை பெற அரிசியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 3 கப்
- விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை கழுவி பின் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அரிசி நன்கு குலைந்து வெந்துவந்ததும் இதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை ஆறவைத்து எடுத்து விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து உச்சந்தலை முழுக்க இதை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வர தலைமுடி உதிர்வதை தடுத்து கூந்தல் நீளமாக வளரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |